புதன், 12 மார்ச், 2014

கவலை இனி இல்லை


ஆத்து ஓரம்

காத்துக்கு வழிவிட்டு

ஒத்தையில நிக்கும்

ஓலக்குடிசைபோல்

அதில் வசிப்பவனும்.

 

ஊர் சனத்தைக்

கரை சேர்க்க

பரிசல் விட்டான்

அவன் வாழ்க்கையுமதில்

ஆடித்தான் பயணித்தது.

 

வறுமை நாளும்

வாட்டியெடுத்தால்

ஆற்று தண்ணீர்

எத்தனை நாள்

பசியாற்றும்?

 

ஆற்று வெள்ளம்

கரை உடைத்து

அழித்ததில் இவனுமுண்டு

கடன் அடைபட்டது 

கவலை இனி இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக