ஒருவேளை சோற்றுக்கு
இரு கண்ணும் சோர்ந்து
வரும் நாளை எண்ணி
வறுமையில் வாடி
வாழ்ந்திட்ட போதும்.
காலமுழுதும் தனக்குக்
கடைசி பிள்ளை
சோறு போடுமென சொல்லி
நம்பி வாழ்ந்த
பெற்றவளின் எண்ணம்.
தீர்க்கமான வார்த்தைகள்
நிறைவேறியது
வாய்க்கரிசியும்
எரிதனலும்-முடிவில்
வாங்கிப் போனபோது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக