வியாழன், 13 மார்ச், 2014

நினைவேறிய எண்ணம்


ஒருவேளை சோற்றுக்கு

இரு கண்ணும் சோர்ந்து

வரும் நாளை எண்ணி

வறுமையில் வாடி

வாழ்ந்திட்ட போதும்.

 

காலமுழுதும் தனக்குக்

கடைசி பிள்ளை

சோறு போடுமென சொல்லி

நம்பி வாழ்ந்த

பெற்றவளின் எண்ணம்.

 

தீர்க்கமான வார்த்தைகள்

நிறைவேறியது

வாய்க்கரிசியும்

எரிதனலும்-முடிவில்

வாங்கிப் போனபோது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக