இறைவனைத் தேடி
ஆலயம் சென்றோம்,
நீயோ
பக்தனைத் தேடி
பாட்டைக்கு வந்தாய்.
அருள் வேண்டி
ஆண்டவனுக்கு
பூமாலை சூட்டினோம்,
நீயோ
வரம் வேண்டி
இரு கரம் கூப்பி
புன்னகை சூட்டுகிறாய்.
பரந்தாமன்
பங்குனித்
திருவிழாவில்
பவனி வருவான்
ஒருமுறையாவது,
நீயோ
மூலவனைப்போல்
ஆலயத்தை விட்டு
வெளியில்
வருவதேயில்லை.
மதங்கள்
வேறுபட்டாலும்
இறைவன் ஒன்றென
தெய்வங்கள் ஏற்கும்,
நீயோ
மதவாதத்தை ஏற்க
மறுப்பதாய்- நாளும்
மறையென ஓதிடுவாய்.
என்றாலும் உன்
சாதி சனத்துக்கு
இடம் ஒதுக்கக்கோரி
கேட்டு வாங்கிடுவாய்.
வழிபடும் இறைவனுக்கு
வகுத்த உருவங்கள்
எத்தனையெத்தனை!
வழிகாட்ட வருகின்ற
மாயரூபனுக்கு
அதைவிட அதிகமல்லவா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக