புதன், 12 மார்ச், 2014

காதலர் தினம்.


விழிகள் நான்கின்

மௌன இராகங்கள்,

தாமரை மலர்போல்

மலரும் இரு பூக்கள்,

 

இதழ்களின் ஆடலில்

உதிரும் வார்த்தைகள்.

கருத்துக்கள் இணைய

மனக்கும் பூமனம்.

 

இதயம் இரண்டிலும்

காதல் பதிவிறக்கம்.

இரண்டும் கற்பனையில்

சிறகு விரித்து மகிழும்

 

பரிமாறும் பூக்களால்

காதல் என்றும்

பெருமை கொள்ளும்

காதலர் தினத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக