அழாத விழியும்
உழாத வயலும்
மனித வாழ்வில்
வளம் காணாது.
விழுந்தும், நடந்தும்
கடலில் கலக்கும்
அனைத்து நீரையும்
கண்கள் தேடும்.
திரண்டு, உருண்டு
விழியில் வழியும்
கண்ணீர் மட்டும்
கண்களைத் தேடும்.
இதய சுமையை
இறக்கி வைத்து
ஆறுதல் தருவது
கண்ணீர் மட்டும் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக