கை வைக்கும் களவும்
கை நீட்டி வாங்கும் இலஞ்சமும்
ஓட்டுக்கு வாங்கும் பணமும்
எல்லாமே திருட்டு தான்
யார் யாரை பிடிப்பது?
தலைமுறை தலைமுறையாய்
இரட்டை வேடம் போடுவது
நடைமுறையாகிவிட்டபோது
குறையென்று கூறுவதற்கு
யாருக்கு உரிமையுண்டு?
நோயின் வேதனையால்
சீக்கிரம் போவதற்கு
எமனுக்கும் இலஞ்சம்
கொடுக்கும் காலம்
வந்தாலும் ஆச்சரியமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக