நாட்களென
அழைத்தபோது
புதனும் வியாழனும்
அருகருகில் இருந்தாலும்
கிரகமென ஆனபோது
மலைக்கும் மடுவுக்கும்
உள்ள நிலைபோல
மனிதனென
வாழும்போது
கூடி வாழ்ந்தாலும்
அரசியலில் கால் பதித்து
பேரெடுத்த போது
வேற்றுக் கிரக
மனிதனைப் போல்
வேறுபட்டு நிற்பதேனோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக