இல்லாத மக்களுக்கு
எப்போதும் துணையிருக்கும்
தன்னோடு சேர்ந்திருந்தால்
கண்மூடி உறங்கவைக்கும்
விரட்டுவதாய்க்கூறி
வீதியெங்கும் முழக்கமிட்டு
உச்சம் தொட்ட தலைவருக்கு
அளவில்லா செல்வம் தரும்
எடுத்துக்கூறி, திருத்துவதுபோல்
நடித்துக் காட்டி
மகிழவைக்கும் நடிகருக்கு
பாலாபிஷேகம் செய்துவைக்கும்
துடைத்து ஒழிக்க எண்ணி
படைக்கும் கவிதைகளால்
மக்களை விழித்தெழ செய்யும்
கவிஞருக்கு புகழை வழங்கும்
ஏனோ
ஏழைக்குமட்டும் எப்போதும்
மஹாபாரதக் கர்ணனைப்போல்
தன்னையே தாரைவார்க்கும்
பொல்லாத வறுமை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக