புதன், 19 மார்ச், 2014

அழியாத நினைவுகள்.


அறுபதைக் கடந்த பெரிசு

அழியாத நினைவுகளால்

குட்டி போட்ட பூனை போல

சுற்றி சுற்றி நடந்து வந்து

 

சொல்லாமல் தடுமாறும்

சோகத்தில் முகம் வாடும்

அவள் தடம் பதித்த இடம் தேடி

அலை பாயும் நெஞ்சம்

 

ஏங்கித் தவிக்கும் மனம்

இல்லையென்று உணரும்போது

தலையை ஆட்டிவிட்டு

கண்ணீரைத் துடைத்துக்கொள்ள

 

பார்த்த மருமகளோ பரிதவிப்புடன்

என்ன மாமா வேண்டுமென்றாள்?

எப்படி சொல்லும் பெரிசு- இறந்த

உன் அத்தையின் நினைவென்று.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக