புதன், 12 மார்ச், 2014

மூங்கில்


சாதி சனத்தோடு

கூடி வாழும்

உயிர்களைப்போல்

சேர்ந்து வாழும்

மூங்கில்களே!

 

ஒன்றுபட்டு வாழும்

உயர் பிறப்பால்

எல்லா இனங்களுக்கும்

எந்த நிலையிலும்

உதவுகிறாயோ!

 

சிறுமூங்கில்

குழலானபோது-உன்

 இசையில் மயங்கி

விலங்குகள் அனைத்தும்

கட்டுபட்டன!

 

பெருமூங்கில்

பாடையானபோது

இறந்த மாந்தர் உடல்கள்

இறுதி பயணம்போக

கட்டுபட்டன!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக