சாதி சனத்தோடு
கூடி வாழும்
உயிர்களைப்போல்
சேர்ந்து வாழும்
மூங்கில்களே!
ஒன்றுபட்டு வாழும்
உயர் பிறப்பால்
எல்லா இனங்களுக்கும்
எந்த நிலையிலும்
உதவுகிறாயோ!
சிறுமூங்கில்
குழலானபோது-உன்
இசையில் மயங்கி
விலங்குகள் அனைத்தும்
கட்டுபட்டன!
பெருமூங்கில்
பாடையானபோது
இறந்த மாந்தர்
உடல்கள்
இறுதி பயணம்போக
கட்டுபட்டன!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக