வியாழன், 13 மார்ச், 2014

கொள்ளி வைப்பதற்கு


அடர்ந்த காடுகள்

கொடிய விலங்குகள்

இவைகளுக்கிடையில்

பத்திரமாய் பயணம்

செய்ததுண்டு.

 

சென்னை மாநகரில்

ஒத்தையாய்

தெருவோரம் நடந்தாலே

உயிருக்கு

உத்தரவாதமில்லை.

 

பட்டப்பகலில் நடுரோட்டில்

வெட்டி சாய்ப்பதும்

பூட்டிய வீடுகளில்

களவும் கொலையும்

மலிவாகிப்போனதால்

 

எங்கும் போவதென்றால்

பெற்ற பிள்ளையை- கூட

அழைத்து செல்லுங்கள்

பாதுகாப்பிற்கல்ல,

கொள்ளி வைப்பதற்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக